புகைத்தலின் தீமை பற்றி இனிமேல் சொல்லித் தான் தெரியவேண்டுமென்பதில்லை. ஆனாலும் இந்த புதிய ஆராய்ச்சி முடிவு புகைத்தல் சார்ந்த ஒரு புதிய கோணத்தைக் காட்டுகிறது.

வாழ்நாளில் புகையே பிடிக்காத ஒரு நபர் புகைப் பழக்கமுடைய ஒரு நபரைத் திருமணம் செய்து கொண்டால் அவருக்கு வலிப்பு நோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. புகை பிடிக்காத ஒரு நபர் புகை பிடிக்காத ஒருவரைத் திருமணம் செய்வதை விட 42 விழுக்காடு இந்த வாய்ப்பு அதிகரிக்கிறது என்பது கவனிக்கத் தக்கது.

புகை பிடிக்காதவர்களும் காற்றில் பரவும் நிகோட்டினால் பாதிக்கப்படுவதை பல ஆராய்ச்சிகள் ஏற்கனவே எடுத்துக் காட்டியுள்ளன. இப்போது தான் முதன் முறையாக புகைப் பழக்கமுடைய வாழ்க்கைத் துணையினால் வலிப்பு நோய் வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறது எனும் புதிய ஆராய்ச்சி முடிவு கிடைத்திருக்கிறது.

அமெரிக்காவில் நடத்தப்பட்ட இந்த விரிவான ஆராய்ச்சியில் 16225 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த ஆராய்ச்சியை முன்னின்று நடத்திய கொலம்பியா பல்கலைக்கழகத்தின் மரியா கிளைமோர், புகையினால் புகைப் பழக்கம் இல்லாதவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் அனேகம் அவற்றில் இதுவும் ஒன்று என குறிப்பிட்டார்.

குறிப்பாக பழைய ஆராய்ச்சிகள் கூட இருப்பவர்களின் புகைப்பழக்கம் புகைக்காதவர்களுக்கும் ஆஸ்த்மா, கான்சர், இதய நோய் உட்பட பல நோய்களைத் தரும் வாய்ப்பு உண்டு என நிரூபித்திருந்தன. காற்றில் பரவும் விஷத்தன்மையே இதன் காரணம். இதனால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள் என்பது அதிர்ச்சியூட்டும் தகவலாகும்.

இந்த புதிய ஆராய்ச்சியின் பயனாக ஆரோக்கியமான உடலுக்கு புகைப் பழக்கத்தை அறவே ஒழிக்கவேண்டும் என்பதுடன், குடும்பத்திலுள்ளவர்களின் உடல்நலத்தைப் பாதுகாக்கவும் புகையை ஒழிப்பது இன்றியமையாயது எனும் கருத்தும் வலுப்பெற்றிருக்கிறது.

வாழ்க்கையை விடப் பெரியதா வெண்புகை - அதைவிட்டொழித்தால் தவழுமே புன்னகை

புகைபிடித்தலும் அதன் எச்சங்களும்..!


சிகரெட்..கெட்டப்பழக்கம் என்று தெரிந்தும் விடமுடியாமல் இன்று பலர் இதற்கு அடிமையாகி இருக்கிறார்கள்..! இங்கே இதை படிக்கும் பெரும்பான்மையோர் சிகரெட் குடிப்பவர்கள்..!
'வேண்டாம்னா பட்டுன்னு விட்டுனனும்' என்று சொல்வது ஈஸி கண்ணா..ஆனால் விடுவது அப்படி ஒன்றும் சுலபமல்ல..! புத்தாண்டு சமயங்களில் இது மாதிரி வசனங்கள் ரொம்ப பிரபலம்..!
நான் இன்றிலிருந்து சிகரெட் குடிப்பதில்லை என்று சொல்லி காலரை திருப்பிக்கொண்டு திரிவார்கள்..! எல்லாம் ஒரு வாரம் தாக்குபிடிப்பார்கள்..பின்பு மெதுவாக ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று சொல்லி ஆட்டத்தை முடித்த இடத்தில் இருது தொடங்குவர்கள்..!
சிகரெட்டை நிறுத்துவதற்கு மன உறுதி மட்டும் அல்ல, வேறு உதவிகளும் தேவை. சிகரெட்டுக்கு மனிதர்கள் அடிமை ஆவது அதிலிருக்கும் "நிக்கோட்டின்" என்ற பொருளுக்காக தான். அந்த நிக்கோட்டின் நம் உடலை அதிகம் சேதப்படுத்துவதில்லை. நம் உடலை சேதப்படுத்துவது புகை தான்.
புகையை நிறுத்த நினைப்பவர்கள் உடனடியாக லைட்டர், மாட்ச், ஆஷ் ட்ரே எல்லாம் குப்பையில் எறிந்துவிட வேண்டும். புகைப்பிடித்தலை நினைவு படுத்தும் எதையுமே அருகில் வைத்திருக்க கூடாது(இது உங்கள் புகை நண்பர்களுக்கும் பொருந்தும்).
இரண்டாவது கட்டமாக நிக்கோட்டின் பொருள் கலந்த சூயிங்க் கம்களை உபயோகப்படுத்தலாம். உடல் நிகோட்டினுக்காக ஏங்கும் போது எல்லாம் இந்த கம்களை சாப்பிடலாம்.
நினைவில் கொள்ளவும்: புகை பிடித்தல் உங்களுக்கு மட்டும் அல்ல, அதை சுவாசிக்கும் அனைவருக்குமே( முக்கியமாக உங்கள் மனைவி, குழந்தை) ஆபத்தானது.
புகைப்பிடிப்பதை நிறுத்துவதால் கிடைக்கும் உடனடி நிவாரணம்:
1. உங்கள் மீதும் உங்கள் உடைகள் மீது அடிக்கும் கொடுமையான பயங்கரமான சிகரெட் நாற்றம்.
2. இருமல், மூச்சு வாங்குதல்
3. குடும்பத்தினரின் பாதுகாப்பு
4. இதயத்துக்கு சற்று ஓய்வு
5. தேவை இல்லாத பண விரயத்தை தடுப்பது
நீண்ட கால நிவாரணம்:
1. நுரையீரல் புற்று நோயை தடுக்கலாம்
2. இதய நோய்களில் இருந்து தப்பிக்கலாம்
3. முக்கியமாக உங்கள் குழந்தைகளை இந்த பழக்கத்தில் இருந்து காப்பாற்றலாம்(புகைக்கும் பழக்கும் இருக்கும் பெற்றோர்களை கொண்டிருக்கும் குழந்தைகளில் 80% வரை புகைப்பவர்களாகவே இருக்கிறார்கள்)
4. முக சுருக்கத்தை குறைக்கலாம்
5. உங்கள் ஆயுளை அதிகமாக்கலாம்.



1.கடவுளுக்காக மனிதனை மனிதன் கொன்று குவிக்கும் காட்சிகள் கடவுளுக்கு தெரியாதா..? இல்லை அவர் ஆதரிக்கிறாரா..?

2.அப்பாவி மக்கள் லெபனான்,இலங்கை,ஈராக் என்று கொல்லபடும்போது கடவுள் சுற்றுலா சென்றுவிட்டாரா..?

3.கடவுளை காட்டுகிறேன் என்று சொல்லி பெண்களை அனுபவித்திலும், சொத்துகள் சேர்ப்பதையும் முழுநேர தொழிலாக ஆக்கிவிட்டவர்கள் கடவுள் ஏன் தண்டிப்பதில்லை..?

4. பச்சிளம் குழந்தைகள் கொடுரமாக கொலை செய்யப்டுகிறாரகள்..! ஒரு பெண்ணை 6 பேர் பாலியல் கொடுமை செய்கிறார்கள்..!

இதை எல்லாம் கடவுளின் திருக்கண்ணுக்கு தெரியாதா..?-இல்லை..
இதெல்லாம் ஏற்றுக்கொள்ளும் ஒன்றை எப்படி கடவுளாக ஏற்றுக்கொள்ள முடியும்..?

தயவு செய்து யாரும் அடுத்தபிறவியில் தண்டனை கிடைக்கும் என்ற பதிலைதரவேண்டாம்..!

அறிவியல் பூர்வமாக நிருபிக்க இயலாத ஒன்றை சொல்லாதீர்கள்.!
நம்புகிற மாதிரி சொல்லுங்க..! 

Comments